கோவை, மார்ச் 17- தூய்மைப்பணியை அவுட்சோர்சிங் மூலம் தனியாருக்கு விடுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட் டோம் என்கிற முழக்கத் தோடு தூய்மைப்பணியாளர் சங்க கூட்டமைப்பின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜகனி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சிய ரால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கூலி யை உடனே வழங்க வேண்டும், அரசாணை 152ஐ உடனடியாக திரும்பபெறு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார் சிஐடியு மாவட்ட நிர்வாகி ஆர்.ராஜன், சமூக நீதி தூய்மைப்பணியாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் ந.பன்னீர் செல்வம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.