districts

img

சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்ழு ஆய்வு

நாமக்கல், ஜன.12-  தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதி மொழிக்குழு திருச்செங்கோட்டில் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் நகரப் பேருந்து நிலை யம், அரசு மருத்துவமனை புதிய கட்டிட பணி, நகர காவல் நிலையம், ஆகியவற்றை ஆய்வு  செய்தனர்.  பண்ருட்டி சட்டமன்ற தொகுதி  உறுப்பினர் வேல்முருகன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், பழனி யாண்டி, ராமலிங்கம், ஜெயக்குமார் ஆகி யோர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது குமா ரபாளையம் நகராட்சி கூட்டுக் குடிநீர் திட்டம்,ஆனங்கூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்,  குமாரபாளையத்தை சிறப்புநிலை நகராட்சியாக மாற்றி தர  வேண்டும். திருச்செங்கோடு கொக்கராயன் பேட்டை சாலையை, நான்கு வழிச்சாலை யாக மாற்றி தர வேண்டும். பரமத்தி வேலூ ரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை  மண்டல நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில்,  உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகனி டம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் உமா,  சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், காவல்  கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், துணைக் கண்காணிப்பாளர் இமயவரம்பன், நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஆணையாளர் சேகர், துணைத்தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.