சேலம், மே 26- ஒன்றிய மோடி அரசின் வேலை யின்மை விலைவாசி உயர்வு வெறுப்பு அரசியலை கண்டித்து சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்), விடுதலை சிறுத்தைகள் கட்சிக ளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல், எரிவாயு பொருட்கள் மீதான வரி கள் அதிகரிப்பு உள்ளிட்ட ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேசன் கடைக ளில் வழங்க வேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். வேலைவாய்ப்பை பெறுகின்ற வகையில் நகர்ப்புற வேலை உறுதி சட்டம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, சிபிஐ, சிபிஐ (எம்எல்), விடுதலை சிறுத் தைகள் கட்சிகளின் சார்பில் பல் வேறு இடங்களில் கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முக ராஜா, சிபிஐ மாவட்ட செயலா ளர் ஏ.மோகன், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த், மாநகர் மாவட்ட பொருளாளர் காஜாமை தீன், சிபிஐ (எம்எல் லிபரேசன்) வேல்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி.ராமமூர்த்தி, டி.உதய குமார், எம்.குணசேகரன், ஐ.ஞான சவுந்தரி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டு சிபிஎம், சிபிஐ, சிபிஎம் லிபரேசன், விடு தலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எண்ணற்றோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு கொடுமுடி பேருந்த நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கொடுமுடி பழனிச்சாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.முருகேசன், மொடக்குறிச்சி கொடுமுடி தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல், மாவட்ட குழு உறுப்பினர் கே.சண்முக வள்ளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி ஒன்றிய செயலாளர் குணசேகரன், சிவகிரி நகர செய லாளர் வரதராஜன், கொடுமுடி நகர செயலாளர் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கெடுத்தனர். ஈரோடு மாநகரம், சூரம்பட்டி 4 ரோடு பகுதியில் நடைபெற்ற மக் கள் சந்திப்பு இயக்கத்திற்கு பெரி யார் நகர் கிளை செயலாளர் பொன்.பாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன், நகர செயலா ளர் பி.சுந்தர்ராஜன் மற்றும் இடைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சத்தியமங்கலம் நகரில் நடை பெற்ற பிரச்சாரத்தில் தாலுகா செயலாளர் கே.எம்.விஜயகுமார், நகரச் செயலாளர் பி.வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். அந்தியூர் வட்டத்தில் நடை பெற்ற வேன் பிரச்சாரத்திற்கு விசிக வணிகரணி மாநில துணைச் செயலாளர் கு.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில், சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்முருகே சன், சிபிஐ வட்டச் செயலாளர் எஸ்.எஸ்.தேவராஜன், விசிக ஒன்றியச் செயலாளர் கு.தங்க ராசு உள்ளிட்டோர் பங்கேற்று பேசி னார்கள்.
நீலகிரி
உதகையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செய லாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். இதில் சிபிஐ மாவட்ட செயலாளர் போஜராஜ், விடு தலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கட்டாரி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங் கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப் பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.