திருப்பூர், மே 31- உடுமலைபேட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி இணைந்து ஞாயிற்றுக்கிழமை பிரச்சார இயக் கம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ் தலைமையில் சின்ன வாளவாடி, பெரிய வாளவாடி, பாப்பனூத்து பிரிவு, சாலையூர், கொடிங் கியம், எரிசினம்பட்டி, வல்லக்குண்டாபுரம், கரட்டுமடம், தேவனூர் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணி வரை நடைபெற்றது. அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் வி. சௌந்தர்ராஜ், மார்க்சிஸ்ட் கட்சி உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.ஜெகதீசன், சு.தமிழ்த்தென்றல், மகேஸ்வரி, மார்க்சிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் என்.சசிகலா, உடுமலை நகர சுதா சுப்பிரமணி யம் ஆகியோர் பேசினர். கட்சி அணியினர் பெருந்திரளா னோர் பங்கேற்றனர்.