districts

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்!

கோவை, ஜூன் 16- தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிமான தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என கோவையில் நடைபெற்ற விழாவில் தலைவர் கள் தெரிவித்துள்ளனர். கோவை கொடிசியா மைதா னத்தில் சனியன்று திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தலைவர்கள் பேசியதாவது: கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர் செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என சொல்லி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு - புதுச்சேரியில் 40/40 வெற்றியை பெற்றுக்கொடுத்த சிற்பி தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுக தொண்டர்கள் சோர்வடையதவர் கள் என கலைஞர் கருணாநிதி சொல்லியுள்ளார். ‘இந்தியா’ கூட்டணி தான் மருத்துவர்கள். இந்தியாவை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீட்டு கொண்டு  வந்தவர்கள் இருவர். ஒருவர் ஸ்டாலின்; மற்றொருவர் ராகுல் காந்தி. 2026 சட்டமன்றத் தேர்தலில் தராளமாக இந்தியா கூட்ட ணிக்கு 200 இடங்கள் கிடைக் கும்.கொள்கைரீதியாக  வெற்றி  பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் தாமரை என்றும் மலராது. அதியமான், ஆதித்தமிழர் பேரவை தமிழ்நாட்டை நிர்மாணித்த சிற்பி என்றால் முத்தமிழர் அறிஞர் கருணாநிதி. 40 தொகுதிகளில் வெற்றிப்பெற மிக முக்கியமானவர் முதல்வர் ஸ்டாலின் தான். தற் போது அமைந்திருக்கும் ஒன்றிய அமைச்சரவையில் ஒரு இஸ்லாமி யர் கூட இல்லை. தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்தவர்கள் இல்லை. மோடி தமிழர்களை திருடர்கள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டார். மோடிக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. அரசியல் சாச னத்தை கையில் எடுத்து, முத்த மிட்டு பதவி ஏற்றுள்ள மோடி, தனது நாடகத்தை துவங்கியுள்ளார். ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தமிழக அரசின் திட்டங்கள் மூலம் மாபெரும் வெற்றியை பெற் றுள்ளோம். கூட்டணியை அரவ ணைத்து சென்றுள்ளார் முதல்வர். திருக்குறளை சொல்லி சொல்லி மக்களைய் ஏமாற்ற பார்த்தார் மோடி.மோடி தரிசனம் கொடுத் தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? 2026 சட்டமன்ற தொகுதி களில் நாம் வெற்றி பெற வேண் ்டும். அதற்கு பிள்ளையார் சுழி போடும் நாள் இது. இன்றைய தினம் முதல் நாம் உழைக்க வேண் டும். கொங்கு மண்டலத்திற்கு சிறப்பு அந்தஸ்து முதல்வர் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி முதல்வரின் கடின உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டை இந்தி யாவே திரும்பி பார்க்க வைக்கும் வெற்றியை பெற்று கொடுத்துள் ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கூட்டணி கட்சி தலைவர்கள் அனை வரையும் அரவணைத்து இவ்வ ளவு பெரிய வெற்றியை பெற்றுள் ளார். கட்டுக்கோப்பான கூட்டணி இது. இதைப்பார்த்து எதிர்க்கட்சி கள் பின் வாங்கி வருகின்றனர். அதிமுக விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியில்லை என்பது மகிழ்ச்சி. மு.க.ஸ்டாலின் ஆட்சி யில் சமூக நீதி காக்கப்படும். தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி திமுக முப்பெரும் விழா நடத்த கோவை மண் எதற்கு தேர்வு செய்யப்பட்டது என்பது தெரியமா? கோவை மண்ணில் திராவிட அரசியலுக்கு எதிராக பேசியவர் கள் தோற்கடிக்கப்பட்டனர். கோவை மண்ணில் நடத்துவது தான் சரி. இது பெரும் மகிழ்ச்சி. இந்தியாவை திரும்பி பார்க்கும் வெற்றியை ஸ்டாலின் பெற்று தந்துள்ளார். சிறுபான்மை மக்க ளின் பயத்தை போக்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். சமூக நீதியை காப்பாற்றவும், ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாகவும் தமிழ்நாட்டில் 40 தோட்டாக்கள் உள்ளன.