கோவை, நவ.20- விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து விவசாயிகள் சூலூர் - திருச்சி சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி வரை எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விவசாய நிலங் களின் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 6 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக விவசாயிகள் சூலூர் விமானப் படை தளம் முன்பாக திருச்சி சாலையில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீ சார் கைது செய்தனர். விவசாயிகளின் திடீர் மறியல் கார ணமாக திருச்சி சாலையில் சுமார் இரண்டு மணி நேரத் திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.