districts

img

உடுமலை வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம்

உடுமலை, மே 11- வழக்கறிஞர்களை தகாத வார்த்தை யில் பேசிய உடுமலை வருவாய் கோட்டாட் சியரை கண்டித்து வழக்கறிஞர்கள் நூற்றுக் கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரபாகர் மற்றும் மாணிக்கவாசகம் ஆகியோர் செவ்வா யன்று மாலை ஒரு வழக்கு சம்பந்தமாக கோட்டாட்சியரை சந்திக்க சென்றுள்ளனர். அப்போது, வழக்கறிஞர்களை பார்த்து கோட்டாட்சியர் ஒருமையில் தகாத வார்த் தைகளில் பேசி வெறியேற்றியதாக  கூறப்ப டுகிறது. இதுகுறித்து அறிந்த வழக்கறிஞர் கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதனன்று கோட்டாட்சியர் கீதாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகை யில், வழக்கறிஞர்களை தகாத வார்த்தை கள் பேசிய வருவாய் கோட்டாட்சியர் கீதா  மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை உடன டியாக இடமாற்றம் செய்ய வேண்டும். சம் பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வந்து  விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித் தனர். இந்த போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.