கோவை, டிச.22- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், எதிர்கட்சி எம்.பி.,க்களை இடைநீக்கம் செய்துவிட்டு, ஒன்றிய பாஜக அரசு பல்வேறு மக்கள் விரோத சட்ட மசோதாக்களை குரல் வாக் கெடுப்பு மூலம் நிறைவேற்றுகிறது. இதன்தொடர்ச்சியாக, அரசியல மைப்பிற்கு முரணாக குற்றவி யல் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்த குற்றவியல் சட்ட மூன்று மசோ தாக்களை உடனே திரும்பப் பெற வேண் டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன் றம் வளாக நுழைவாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.ஜோதிகுமார் தலைமை வகித்தார். மாநிலப் பொரு ளாளர் எஸ்.மாசேதுங், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் செல்வராஜ், வேலுச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கோபால்சங்கர், எ.எல்.ஏ மாவட்டத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளங்கோவன், வழக்கறிஞர் வெண் மணி உள்ளிட்ட திரளான வழக்கறி ஞர்கள் பங்கேற்று கண்டன முழக்கங் களை எழுப்பினர். முடிவில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட் டத் தலைவர் என். ராமர் நன்றி கூறி னார்.