நாமக்கல், ஏப்.23- நீதிமன்றத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி குமார பாளையம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத் தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் நகர் பகுதியில் தனியார் கட்டி டத்தில் நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட உரி மையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் வளாகத்தில் வழக்கறிஞர்கள் தங்குவ தற்கு அறைகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் எவ்வித நடவ டிக்கையும் இல்லை. இந்நிலையில், குமார பாளையத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், உயர் நீதிமன்றம் சார்பு நீதி மன்றம் அமைக்க உத்தரவு பிறப்பித்தும் அதற்கான முன்னேற்பாடுகளை எதுவும் செய்யாமல், மாவட்ட முதன்மை நீதிபதி அதற் கான உத்தரவுகளை வழங்காமல் சார்பு நீதி மன்றம் அமைக்கவும் முன்னேற்பாடுகள் எது வும் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனை கண்டித்து நீதிமன்றத்தை புறக்க ணித்து குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங் கத் தலைவர் சரவண ராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிமன்ற பணிகள் பாதித் தது.