districts

img

புதிய நீதிமன்றத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

உதகை, ஜன.27- உதகையில் புதிதாக திறக்கப் பட்ட நீதிமன்றத்தில் அடிப்படை வச திகள் ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் வியாழ னன்று உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டனர். உதகை ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் விரைவு மகளிர் நீதிமன்றம் உள்ளிட்ட கட்டிடங்கள் உள்ளன.  மேலும், ஒரு சில நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரு கின்றன. இந்நிலையில், பழங்கால கட்டிடத்தில் இயங்கி வருவதாலும், போதுமான இடம் இல்லாததாலும், நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத் தில் இயங்குவதை நிறுத்தும் வகையி லும் உதகை, பிங்கர் போஸ்ட்-யை  அடுத்த காக்கா தோப்பு பகுதியில் ரூ.33 கோடி மதிப்பில் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட் டுள்ளது. சுமார் மூன்றரை ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ள இந்த ஒருங் கிணைந்த வளாகத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், விரைவு மகளிர் நீதிமன்றம், சார்பு நீதிமன் றம் உட்பட 8 நீதிமன்றங்கள் இயங்க உள்ளன. மேலும் நூலகம், தாய்மார் கள் பாலூட்டும் அறை உட்பட பல் வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள் ளது. போதுமான இடவசதி இருப்ப தால் தேவைப்பட்டால் கூடுதல் நீதி மன்றங்கள் ஏற்படுத்த முடிவு செய் யப்பட்டு உள்ளது. ஆனாலும் சாலை உள்ளிட்ட ஒரு சில அடிப்படை வச திகள் இல்லை.  இதற்கிடையே மாவட்ட நீதிமன் றம் வெள்ளியன்று முதல் புதிய நீதி மன்ற வளாகத்தில் செயல்பட தொடங் கும் என்று நீதிமன்ற நிர்வாகம் தெரி வித்துள்ளது. இதனால் அதிர்ச்சிய டைந்த வழக்கறிஞர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று பழைய நீதிமன்ற வளாகத்தில் உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரபோஸ் தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தில், மூத்த வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.