districts

img

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்

திருப்பூர், நவ.22- வழக்கறிஞர் பாதுகாப்பு சட் டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  கீழ்மை நீதிமன்ற வழக்கறிஞர்கள் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய  இரு தினங்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, நாகர்கோவில், தஞ்சா வூர், ஒசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் வழக்கறிஞர்கள் மீது அன்மை காலமாக கொலை வெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதை தடுக்கும்  வகையில், வழக்கறிஞர் பாதுகாப்பு  சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற  வேண்டும். அனைத்து நீதிமன்றங்க ளிலும் போலீஸ் பாதுகாப்பை அதிக ரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி மாநி லம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதி மன்றங்கள் முன்பு வியாழன் மற்றும்  வெள்ளி ஆகிய இரு தினங்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர்,  தாராபுரம், பல்லடம், உடுமலை, அவி நாசி, ஊத்துக்குளி ஆகிய பகுதிக ளில் உள்ள கீழ்மை நீதிமன்ற வழக்க றிஞர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் நீதி மன்ற புறக்கணிப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர்.   திருப்பூர் நீதிமன்றம் முன்பு வியா ழனன்று திருப்பூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.என்.சுப்பிரமணி யம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் அட்வ கேட் அசோசியேஷன்  தலைவர் அமர் நாத், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் சுப்புராஜ்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.  இதில், திரளான வழக்கறி ஞர்கள் கலந்து கொண்டு வழக்கறி ஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடி யாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பினர்.