தருமபுரி, மார்ச் 19- தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் மனநலம் பாதிக்கப் பட்டோருக்கான மீட்பு சேவை மையம் துவக்கப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரியில் முதலாம் ஆண்டு மருத்து வம் பயிலும் மாணவ, மாணவியர்க ளுக்கு வெள்ளை நிற கோட், ஸ்டெதஸ் கோப் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழ ங்கினார். இதனை தொடர்ந்து, அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் தொப்பூர் - பாளையம் புதூர் சுங்கச்சாவடியின் சார்பில் ரூ.15.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக் கப்பட்ட புதிய மயக்கவியல் பணி நிலைய கருவியுனையும், அதனை தொடர்ந்து அரசு தருமபுரி மருத்து வக் கல்லூரி மருத்துவமனை வளாகத் தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆதர வற்ற நோயாளிகளுக்கான மீட்பு சேவை மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கே.அமுதவல்லி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) சவுண்டம்மாள், தருமபுரி நகர் மன்றத்தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அரசு தருமபுரி மருத்துவக் கல் லூரி மருத்துவமனை துணை முதல் வர் டி.ஏ.சாந்தி உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.