districts

img

ரூ.48.87 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகள் துவக்கம்

உடுமலை, டிச.3-  உடுமைலை நகராட்சி நூற்றாண்டு விழா நடை பெறுவதை முன்னிட்டு ரூ.48.87 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் துவக்கிவைத்தார்.  உடுமலை நகராட்சியில் நூற்றாண்டு விழா கொண்டாடும் வகையில், உடுமலை மத்திய பேருந்து நிலைய விரிவாக்கம், தங்கமாள் ஓடை  பகுதியில் வெள்ள தடுப்பு மற்றும் நடைமேடை அமைத்தல், உடுமலை வார சந்தையை புதுப் பித்தல் மற்றும் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற ரோபடிக் இயந்திரம், பராமரிப்பு இல்லாத நக ராட்சி பூங்காக்களை சீரமைத்தல் என்பது உள் ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு என ரூ.48.87 கோடி மதிப்பில் புதிய திட்டங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ். வினித், வருவாய் கோட்டாட்சியர் கீதா, வட்டாட் சியர் ராமலிங்கம், திமுக நகர செயலாளர் மத்தீன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.