உதகை, நவ.6- வடகிழக்கு பருவமழையால், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்ட தால் சனியன்று ரத்து செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர், உதகை வரை மலை ரயில் இயக்கப்படுகிறது. நாள்தோரும் இரண்டு முறை இந்த ரயில் இயங்கு கிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதில் அடர்லி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் ஹில்குரோ பகுதி யில் நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் உள்ள மண்ணை அகற்றினர். இதை யடுத்து மலை ரயில் குன்னூர் வந்த டைந்தது.