தொடர் மழையால் ஏரிகள் நிரம்பின!
நாமக்கல், டிச.2- நாமக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை யால், ஏரிகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள் ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த இரு வாரங்களாக பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பரவலாக உள்ள ஏரி உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்களின் நீா்மட்டமும் கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் 79 ஏரிகள் உள்ளன. இவற்றில் 13 ஏரிகள் தொடர் மழை காரணமாக அதன் முழுக் கொள்ளவையும் எட்டியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுபோல 2 ஏரிகள் 90 சதவிகித மும், 3 ஏரிகள் 80 சதவிகிதமும், ஒரு ஏரி 70 சதவிகிதம், 9 ஏரிகள் 50 சதவிகிதம் மற்றும் 20 ஏரிகள் 25 சதவிகிதம் வரை நிரம்பி யுள்ளன. மீதமுள்ள 31 ஏரிகள் தொடர் மழை பெய்தபோதும் நிரம்பாமல் வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது. இனி வரும், கனமழையால் இந்த ஏரிகளும் நிரம்பும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்குள் புகுந்த காட்டு யானைகள்
கோவை, டிச.2- கோவை அருகே இரவு நேரத்தில் காட்டுயானைகள் வீட் டுக்குள் வந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் யானைகளின் வலசை காலம் துவங்கி உள்ளதால், கேரள வனப்பகுதியை ஒட்டி யுள்ள தமிழக வனப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மேலும், மருதமலை வனப் பகுதியிலும் யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த யானைகள் அவ்வப்போது அருகில் உள்ள பாரதியார் பல் கலைக்கழகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரு வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இந்நிலையில், வெள் ளியன்று இரவு வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளி யேறிய பெண் யானை, ஐஓபி காலனி மாலதி நகர் பகுதிக்குள் புகுந்தது. இதன்பின் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்த யானைகள், குமார் என்பவரது வீட்டிற்குள் நுழைய முயன் றது. இதனால் வீட்டிலிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு மாடிக்கு சென்றுள்ளனர். உள்ளே வந்த யானைகள் உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என பார்த்துவிட்டு திரும்பி சென்றன. இதனிடையே, யானைகள் ஊருக்குள் புகுந்து இருப்பதை அறிந்த வனத்துறையினர் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன்பின் மீண்டும் இரு யானைகளும் வனப்பகுதிகளுக்குள் சென்றன. தற்போது இதுகுறித்த காணொளி காட்சிகள் இணை யத்தில் வைராலாகி வருகிறது.
குட்கா பொருட்கள் விற்பனை: 3 கடைகளுக்கு ‘சீல்’
தருமபுரி, டிச.2- காரிமங்கலம் பகுதியில் தடை செய் யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு உண வுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்‘ வைத்து, ரூ.15 ஆயிரம் அபரா தம் விதித்தனர். தருமபுரி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலு மாக ஒழிக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் உணவுப்பாதுகாப்புத்துறையினருடன், காவல் துறையினர் இணைந்து கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் மளிகைக் கடை, பெட்டிக்கடை, பீடா கடைகள், நெடுஞ்சாலை தேநீர் கடைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடை கள் தோறும் சோதனை நடத்தி வருகின் றனர். இந்நிலையில், காரிமங்கலம் பகு தியில் காரிமங்கலம் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காவல் உதவி ஆய்வாளர் யூயல்மூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது காரிமங்கலம் ராமசாமி கோவில் பகுதியில் செயல்படும் மளிகைக்கடை, பேருந்து நிலையத்தில் செயல்படும் பேன்சி பொருட்கள் கடை ஆகியவற் றில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப் பட்டது. அதேபோன்று ஜிட்டாண்ட அள்ளி பகுதியில் செயல்படும் ஒரு மளிகைக்கடையில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மூன்று கடைகளும் செயல்படுவ தற்கு தடை விதித்து ‘சீல்’ வைத்தனர். ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம், மற்றொரு கடைக்கு ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வாகன ஓட்டிகளை மறிக்கும் யானைகள் தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறை
உதகை, டிச.2- மஞ்சூர் - கோவை சாலையில் குட்டிகளுடன் நடமாடும் காட்டு யானைகள் அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழி மறிப்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு நடவ டிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள் ளன. இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டுயானைகள், உணவு மற்றும் குடிநீர் தேடி வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்றது. இதனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லா ததால் இவ்வழியாக அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தன. இந்நிலை யில், காட்டுயானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பி யுள்ளன. கடந்த சில தினங்களாக 2 குட்டிகளுடன் 4 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் நட மாடி வருகின்றன. பெரும்பாலும் சாலைகளிலேயே யானை கள் நடமாடி வருவதால் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நடு சாலையில் குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால் கார், வேன், இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அச்சமடைந்து நீண்ட தொலைவிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி விடு கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் குட்டிகளுடன் யானைகள் நீண்ட நேரம் சாலையில் முகாமிடுவதால் வாகனங்களில் செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும், காட்டு யானைகளின் நடமாட்டத்தால் நீண்ட நேரம் போக்கு வரத்தும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், குந்தா ரேஞ்சர் சீனிவாசன் தலைமையில் வனவர் பிச்சை, வனக்காப்பாளர் கண்ணன் மற்றும் வனப்பணியாளர்கள் மஞ்சூர் – கோவை சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர். மேலும், இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சாலைகளில் காட்டு யானைகளை கண்டவுடன் வாகனங் களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். பயணிகள் கீழே இறங்கி யானைகளை கண்டு கூச்சலிடுவது மற்றும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக்கூடாது என அறிவுறுத் தப்பட்டுள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: இருவர் கைது
திருப்பூர், டிச.2- கணக்கம்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகைகளை திருடிச் சென்ற இருவரை போலீசார் வெள் ளியன்று கைது செய்தனர். பெருமாநல்லூா் காவல் ஆய்வாளா் வசந்தகுமார் தலை மையிலான போலீஸாா் கணக்கம்பாளையம் பிரிவு அருகே வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த இரு வரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செல்வராஜ் (27), திருப்பூர் சத்யா நகர் பகு தியைச் சேர்ந்த பெஞ்சமின்ராஜ் மகன் விஜய் (28) என்பதும், இவர்கள் கணக்கம்பாளையம் பாலாஜி நகரில் செப்டம்பர் 23 ஆம் தேதி பூட்டியிருந்த சிவபிரகாஷ் (30) என்பவரது வீட்டில் 4 பவுன் நகைகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
டிசம்பர் 9 திருப்பூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்
திருப்பூர், டிச.2- டாக்டர் கலைஞர் அவர்களின் நூற் றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் தனி யார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.9 தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 8மணி முதல் மாலை 4 மணி வரை நடை பெறவுள்ளது. இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட முன் னனி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட் களை தேர்வு செய்யவுள்ளனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, பொறி யியல் மற்றும் தொழிற்கல்வி பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்துவித தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இல வசம். இம்முகாமில் பங்கேற்க www.tnprivate jobs.tn.gov.in என்ற இணையதள முகவரி யில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத் தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக் கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோச னைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல் கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தினை 0421-2999152 அல்லது 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு விழிப்புணர்வு
திருப்பூர். டிச.2- திருப்பூரில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களும் தங்கி பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்க ளில் பணியாற்றி வருகின்ற னர். இதனிடையே பொது மக்களின் ஜனத்தொகைக்கு ஏற்ப வழிப்பறி, கொலை உள்ளிட் குற்ற சம்பவங்க ளும் நாளுக்கு நாள் அதிக ரித்த வண்ணம் உள்ளன. இத னிடையே திருப்பூர் மாநகர போலீசார் சார்பில் தாராபுரம் சாலை புதூர் பிரிவு பழைய பேருந்து நிலையம் டவுன் ஹால் அவிநாசி சாலை உள் ளிட்ட இடங்களில் பேருந்துக ளில் பயணிக்கும் பொது மக்க ளிடம் வெள்ளியன்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில், தங்கள் உடமைகளை ஜாக்கிரதையாக எடுத்து சொல்ல வேண்டும் என்றும், வழிப்பறி உள்ளிட்ட செயல்க ளில் பாதிக்கப்பட்டால் குற்ற வாளிகள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
வெள்ளக்கோவிலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர், டிச.2- வெள்ளக்கோவில் பகுதிக்கு உட்பட்ட கடைகளில் விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையி லைப் பொருட்கள் வெள்ளியன்று பறிமுதல் செய்யப்பட் டன. திருப்பூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஜெகதீஸ்குமாா் உத்தரவின் பேரில், வெள்ளக் கோவில் பகுதியில் பள்ளிக் கூடங்களுக்கு அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. மாவட்ட புகையிலை தடுப்புப் பிரிவு அதிகாரி பிரவீன், மாவட்ட நலக் கல்வியாளர் ராஜ்குமார், வெள்ளக்கோவில் வட்டார மருத்துவத் துறை சுகாதார ஆய்வாளர் கதிரவன் ஆகியோர் பல்வேறு இடங்க ளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முத்தூர் சாலை டி.ஆர். நகர் அரசுப் பள்ளிக்கு அருகே பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் ஒரு கடை யிலிருந்து பீடி, சிகரெட், குட்கா போன்றவை பறிமுதல் செய் யப்பட்டன. பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் புகைப் பிடித்துக் கொண்டிருந்த 18 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல வெள்ளக்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே உள்ள ஒரு தேநீர்க் கடையில் இருந்தும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட் டன. மொத்தம் ரூ.10 ஆயிரம் புகையிலைப் பொருள்கள் பறிமு தல் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்து வர் டி.ராஜலட்சுமி தலைமையில் பணியாளர்கள், பொது மக்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண் டனர்.