உதகை, அக்.10- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங் களில் பாலூட்டும் அறை பரா மரிப்பின்றி பூட்டி கிடக்கும் அவல நிலை உள்ளது. ஒரு குழந்தை ஆரோக்கிய மாக வளர்வதற்கு பிறந்ததிலி ருந்து முதல் ஒரு வருடத்திற்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் மிகவும் அவசியமாகும். பெண் களும் வேலைக்கு செல்வதா லும், வெளியிடங்களுக்கு செல் வதாலும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் சிக் கல்கள் ஏற்பட்டது. இதேபோல், பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயணம் நிமித்தமாக வெளியே செல்லும் போது பேருந்து நிலையங்களில் காத் திருக்க வேண்டியுள்ளது. தங் கள் இருப்பிடத்திலிருந்து பணி இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்க ளுக்கோ செல்ல சில மணி நேரங் கள் தேவைப்படும். எனவே, பேருந்து நிலையங் களில் காத்திருக்கும் நிலையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைக ளுக்கு எவ்வித இடையூறுமின்றி தனிமையில் வசதியாக பாலூட் டும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் பாலூட் டும் அறை திறக்கப்பட்டு இயங்கி வந்தது. அந்த அறை யில் இருக்கைகள், மின் விசிறி உள்ளிட்டவைகள் இருந்தது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில வருடங்களாக இந்த அறை எவ்வித பாராமரிப்பு மின்றி பூட்டிய நிலையில் உள் ளது. சில இடங்களில் இந்த அறை யில் வைக்கப்பட்டிருந்த இருக் கைகள் சேதமடைந்த நிலையி லும், சில இடங்களில் துர்நாற் றம் வீசும் வகையிலும் அசுத்த மாகவும் உள்ளது. பல பேருந்து நிலையங்களில் எப்போதும் பூட்டி கிடக்கிறது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட பொதுமக்கள் கூறுகையில், நீல கிரி மாவட்டத்தில் உதகை பேருந்து நிலையத்தில் உள்ள பெண்கள் பாலூட்டும் அறை தொடங்கப்பட்ட ஆரம்ப காலங் களில் மிகவும் பெண்களுக்கு உபயோகமாக இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்க ளாக பெரும்பாலான நேரங்க ளில் அறை பூட்டி கிடக்கிறது. இதுகுறித்து அங்குள்ள பணி யாளர்களிடம் கேட்டால் அறை யைத் திறந்து வைத்தால் தேவை யில்லாமல் யாராவது உள்ளே சென்று விடுகிறார்கள். அத னால் பாதுகாப்பு நோக்கத்திற் காக பூட்டி வைக்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் வெளியூரிலிருந்து வரும் கிராமப்புற பெண்கள் தூரத்தில் இருந்து பார்க்கும் போது அறை பூட்டி இருந்தால் யாரிடம் கேட்பது என்று தெரி யாமல், சங்கடப்பட்டு கொண்டு குழந்தைக்கு சில நேரங்களில் பால் கொடுக்காமல் சென்று விடுகின்றனர். எனவே தாய்மார் கள் பாலூட்டும் அறையை திறந்து வைக்க வேண்டும். அதே சமயத்தில் பேருந்து நிலை யங்களில் இவ்வாறு தாய்மார் கள் பாலூட்டும் அறை இருப்பது கிராமப்புற பெண்களில் பெரும் பாலானோருக்கு இன்னும் தெரி யவில்லை. எனவே இதுகுறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும், என்றார். தாய்மை உணர்வோடு துவங் கப்பட்ட இந்த பாலூட்டும் அறை தற்போது ஒருசில இடங்களில் பயன்பாடு இன்றி கிடப்பது மிக வும் வேதனைக்குரியதாகும். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தனித்து அக்கறை எடுத்து பாலூட்டும் அறைகளை பராம ரித்து தாய்மார்கள் பயன்படுத்த ஏதுவாக மாற்ற வேண்டும் என் பதே அணைவரின் கோரிக்கை யாக உள்ளது.
-ஷேக் அமீன்