districts

img

இழுத்தடிக்கும் உற்பத்தியாளர் சங்கங்கள் தொழிலாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மார்ச் 29- பாத்திர தொழிலாளர்கள் கூலி உயர்வு  பேச்சுவார்த்தையில் இழுத்தடித்து காலதா மதம் செய்யும் உற்பத்தியாளர் சங்கங் களைக் கண்டித்தும், உடனடியாக நியாய மான ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும்  பாத்திர தொழிற்சங்கங்கள் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தை நடத்தினர். எவர் சில்வர் உற்பத்தி யாளர் சங்க அலுவலகம் முன்பு புதனன்று  தொழிற்சங்கங்கள் கூட்டு கமிட்டி சார்பில் இப் போராட்டம் நடைபெற்றது.  மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில்  செவ்வாயன்று பாத்திர தொழிலாளர்கள் கூட்டு கமிட்டி மற்றும் பாத்திர உற்பத்தி யாளர்கள் சங்க நிர்வாகிகள் இடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், மார்ச் 31  ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் கூலி  உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக  முடிவு எடுக்கும்படி அரசு தரப்பில் வலியுறுத் தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் தொழில்துறை துணை ஆணையர் செந்தில் குமார், காவல்துறை துணை ஆணையர் அணில் குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். இதனிடையே உற்பத்தியாளர் சங்கங்க ளின் காலம் கடத்தும் அணுகுமுறையை கண் டித்து, தொழிற்சங்கங்கள் புதனன்று எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டு  கமிட்டி தலைவர் எல்பிஎப்  வேலுச்சாமி தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காமாட்சி அம்மன் சங்கம் அர்ஜுனன், ஏஐடி சியு செல்வராஜ், ஏடிபி தேவராஜ், ஐஎன்டி சியு ஈஸ்வரன், எச்எம்எஸ் அப்புகுட்டி, பிஎம் எஸ் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  இறுதியாக சிஐடியு மாவட்ட செய லாளர் கே.ரங்கராஜ், இதுவரை நடந்த பேச்சு வார்த்தை குறித்து விளக்கிப் பேசினார். மேலும் 31 ஆம் தேதி நியாயமான கூலி உயர்வு  வழங்காவிட்டால், அடுத்த கட்ட முடிவுகள்  குறித்து ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும்  தொழிற்சங்கங்கள் மகாசபையில் தெரிவிக் கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பாத்திர  தொழிலாளர்கள் பங்கேற்றனர்.