திருப்பூர், ஜூன் 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் முன்னாள் கோவை கிழக்கு மாவட்டச் செயலாளருமான குரல்குட்டை தோழர் எம்.தங்கவேலின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக் கப்பட்டது. குரல்குட்டையில் நடந்த எம்.தங்கவேல் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், கிளைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாடசாமி, காளிமுத்து, பன்னீர்செல்வம், ரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.