districts

கும்கி யானைகள் திருப்பி அனுப்பப்பட்டன

ஈரோடு, மே 18- கள்ளிப்பட்டி அருகே காட்டு யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட 2 கும்கிகளை முதுமலைக்கு வனத்துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப் பகுதியிலிருந்து கடந்த சில நாட்களுக்கு  முன்பு ஆண் காட்டு யானை வெளியேறி டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே  உள்ள வரப்பள்ளம் ஆற்றங்கரையோர விவ சாய தோட்ட பகுதியில் சுற்றித்திரிந்தது. அப்போது அடசபாளையம் பகுதியில் தனி யாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை  என்கிற சித்தேஷ்வரன் என்பவரை தாக்கி யதில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து.  மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு  அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் வனச் சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம்  வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலை மையிலான வனத்துறையினர் அந்த காட்டு யானையை பெருமுகை வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர். எனினும் அந்த காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்து உயிர்  தேசத்தை ஏற்படுத்தி விடுமோ? என்று மக்கள்  அச்சப்பட்டனர். இதனால் அந்த காட்டு  யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து காட்டு யானையை பிடிக்க  முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை கள் முகாமில் இருந்து கடந்த சில நாட் களுக்கு முன்பு லாரிகளில் பொம்மன், சீனி வாசன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக் கப்பட்டன. பின்னர் இவற்றை பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகே உள்ள உரம்புகிணறு மாரியம்மன் கோவில் பகுதி யில் கட்டி வைத்து உணவு கொடுத்து வந் தனர். மேலும், பெருமுகை வனப்பகுதியில் டிரோன் கேமரா மூலமாக அந்த காட்டு யானையை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதால் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், 2 கும்கி யானைகளை யும் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கே  திருப்பி அனுப்ப அந்தியூர் வனத்துறை யினர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து புதனன்று 2 லாரிகளில் கும்கி யானைகளை ஏற்றி முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.