districts

img

சிபிஐ வேட்பாளர் சுப்பராயனுக்கு கும்ப வரவேற்பு

திருப்பூர், மார்ச் 30- இந்தியா கூட்டணியில், திருப்பூர் நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்பரா யன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டபோது, அப்பகுதி மக்கள் உற்சாக வர வேற்பு அளித்தனர். இந்தியா கூட்டணி சார்பில் திருப்பூர் நாடா ளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுப்ப ராயன் வியாழனன்று, திருப்பூர் வடக்கு  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிப் பாளையம் துவங்கி ஆத்துப்பாளையம், அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகள் வழியாக வேலம்பாளை யம் வரை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன், செய்தி மற்றும் தமிழ் வளர்ச் சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாந கராட்சி மேயர் ந.தினேஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், காங்கிரஸ் மாநகரத் தலை வர் கிருஷ்ணன் ஆகியோர் வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டனர். முன்னதாக செட்டிப்பாளையம் பகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியி டும் வேட்பாளருக்கு கும்ப வரவேற்பு அளிக் கப்பட்டது. மேலும், தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், ச.நந்தகோபால், வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாரப்பன் உட்பட பலர் பங்கேற் றனர்.