சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில மாநாட்டை கோவையில் வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த வரவேற்புக்குழுவிற்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தல் கூட்டம் கோவை வரதராஜபுரம் நாராயணசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநபான், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அரசுபோக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகி முருகைய்யா மற்றும் அரசுபோக்குவரத்து ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் பரமசிவம், வேளாங்கண்ணிராஜ், கோபால் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.