சேலம், பிப்.8- பல்வேறு மாநிலங்களில் நடை பெற்ற சாப்ட் டென்னிஸ் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஓமலூர் மின்வாரிய அலுவலகம் அருகே நடை ெபற்ற விழாவில் பாராட்டு தெரிவிக் கப்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் மின் வாரிய அலுவலகம் அருகே உள்ள தனியார் சேலம் சாப்ட் டென்னிஸ் அகாடமி விளையாட்டு மைதானத் தில் நடைபெறும் சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் தமிழ்நாட்டின் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்க ளது திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலூர் விஐடி கல்லூரியில் 17 ஆவது சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி கள் நடைபெற்றன. அந்த போட்டியில் தமிழக வீரர்கள் கலந்து கொண்டு தங் கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் மஹதி என்பவர் தங்க பதக்க மும், தனுஷ் அபினவ் வெண்கலப் பதக்கம் வென்றனர். தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் 67 ஆவது தேசிய பள்ளி சம்மேளனம் சார்பில் நடைபெற்ற சாப்ட் டென்னிஸ் போட்டியில் பெண் கள் பிரிவில் மஹிதா, மிருதுளா, ஸ்ரீநிதி மற்றும் ஸ்ருதிலாயா ஆகி யோர் தங்கப்பதக்கங்களையும், தனிகா, ரிஷிகா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர், ஆண் கள் பிரிவில் ரிஷி தங்கப்பதக்கமும் தருண், கிருஷ்ணா, மற்றும் தனுஷ் அபிநவ் வெண்கலப் பதக்கம் வென்ற னர். இதேபோல் மத்திய பிரதேசத் தில் நடைபெற்ற 20 ஆவது தேசிய அளவிலான சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் திருமங்கை தங்கப்பதக் கம் வென்றார். இந்நிலையில், தேசிய அளவில் நடைபெற்ற சாப்ட் டென்னிஸ் போட் டிகளில் பதக்கங்கள் வென்ற இந்த வீரர்களுக்கான பாராட்டு விழா, ஓம லூர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள சேலம் சாப்ட் டென்னிஸ் அகா டமி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் சங்க துணைத் தலைவர் செந்தில்குமார், ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி, ஓமலூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், பேராசிரியர் கண் ணன் உள்ளிட்ட பலர் வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.