கோவை, டிச.15– ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் கேடிசி நிறுவனத்தை கண்டித்து கோவையில் தொழிலா ளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட் டத்தை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கேரளா டிரான்ஸ் போர்ட் கம்பெனி என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கோவை - திருச்சி சாலை யில் உள்ள சுங்கம் பகுதியில் இதன் கிளை இயங்கி வருகிறது. இதில் ஓட்டுநர், மெக்கானிக், சுமைப்பணியாளர்கள் என 20க்கும் மேற்பட் டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக முறையாக ஊதி யம் தரப்படாமல் கேடிசி நிர்வாகம் இழுத்த டித்து வருகிறது. குறிப்பாக, கடந்த மூன்று மாதங் களாக ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படாத தால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் மற் றும் அவர்களின் குடும்பங்கள் பெரிதும் அவதி யடைந்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் முறையிட்டும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. '
இதனைய டுத்து செவ்வாய்கிழமை முதல் சிஐடியு தலைமை யில் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். இப்போராட்டத்தின் இரண்டாவது நாளான புதனன்று கேடிசி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க் கும் விதமாக கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இப்போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சாலை போக்கு வரத்து சம்மேளன செயலாளர் எஸ்.மூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் ரபீக், தலைவர் வேணுகோபால், சிபிஎம் மாவட்டக்குழு உறுப் பினர் என்.ஜாகீர், நகரக்குழு உறுப்பினர் த.நாக ராஜ், கேரளா கிளப் செயலாளர் சந்தோஷ் உள் ளிட்டோர் உரையாற்றினர். இதுகுறித்து சிஐடியு கேடிசி கிளைச் செயலா ளர் மணிகண்டன் கூறுகையில், இந்நிறுவனத் தில் 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகி றோம். எங்களின் முழு உழைப்பும் இந்த நிறுவனத் தின் வளர்ச்சிக்காகவே அர்ப்பணித்துள்ளோம். ஆனால், கடந்த ஓராண்டு காலமாக கேடிசி நிர்வா கம் திட்டமிட்டே, ஊழியர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பணப் பயன்களை இழுத்தடித்து வருகிறது. இந்நிறுவ னத்தை நம்பி பயனில்லை என பலர் பணியில் இருந்து விடுவித்துக் கொண்டனர். இவர்களுக் கான பணிக்கொடையும் கூட இதுவரை வழங்கப் படவில்லை. எனவே, கேடிசி நிர்வாகம் உடனடி யாக எங்களின் வாழ்நிலை அறிந்து ஊதியம் உள் ளிட்ட பணப்பயன்களை வழங்க வேண்டும். அது வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடை பெறும், என்றார்.