பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவை மண்டல இணைச்செயலாளர் கே.ஆர்.சக்கரவர்த்தியின் பணி நிறைவு பாராட்டு விழா செவ்வாயன்று நடைபெற்றது. இதில், கோவை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.கருப்பையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார், சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.