சேலம், ஜூன் 28- மூன்றாண்டுகளாக பட்டா வழங்க மறுக் கும் கோட்டாட்சியர், மாவட்ட வன அலுவ லரை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆத்தூர் கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு தலைமை ஏற்றார். இதில், வன உரிமைச் சட்டம் 2006 இன் படி கிராம வன உரிமை குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. ஆனால், நில அளவை செய்து பட்டா வழங்காமல் கோட்டாட்சியர், மாவட்ட வன அலுவலர் மூன்று ஆண்டுகளாக கால தாமதம் செய்து வருகின்றனர். மலைவாழ் மக்களுக்கு கோட்டாட்சியர் காலதாமதம் இன்றி சாதிச் சான்றிதழை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத் தில் முழக்கங்கள் எழுப்பினர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எம்.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டனர்.