ஈரோடு, மே 12- கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ள னர். கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குளித்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், நாமக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் குடும்பத் துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல் வார்கள். காளிங்கராயன் பாசனத்துக் காக தண்ணீர் திறக்கும்போது கொடி வேரி அணைக்கு நீர்வரத்து அதிக ரித்து காணப்படும். இந்நிலையில், கடந்த ஒரு வாரத் திற்கும் மேலாக கொடிவேரி அணை பகுதியில் பராமரிப்பு பணி நடந்து வந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கடந்த 9 ஆம் தேதி முதல் மீண்டும் கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால், கொடிவேரி அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வருகிறது. இதனால், சுற்றுலா பய ணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், வரும் வாரத்தில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிக ரித்து காணப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.