districts

கொடநாடு கொலை வழக்கு: செல்போன் ஆய்வில் முக்கிய தகவல்?

உதகை, ஜூலை 29- கொடநாடு கொலை வழக்கில், செல் போன் ஆய்வில் முக்கிய தகவல் கிடைத் துள்ளதாக தெரிகிறது. கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச் சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ் டேட்டில், கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது.  இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசா ரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சிபிசிஐடி போலீசார் நீதி மன்றத்தில் ஒப்படைத்து இருந்த 8 செல் போன்களை தங்களிடம் தரும்படி மனு போட்டு இருந்தனர். அந்த செல்போன்களில் ஏதாவது தகவல்கள் உள்ளதா? என்பதை அறிய அதனை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகவும், அதில் கிடைக்கும் தகவல் களை கொண்டு விசாரணை நடத்தவும் போலீ சார் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து செல் போன்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப் பட்டது. போலீசார் அதனை ஆய்வுக்கு உட் படுத்தினர்.  இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் 24ஆம் தேதியன்று நடந்துள்ளது. இதற்கு அடுத்த நாள் சயானும், கனகராஜூம் ஆந்திராவில் இருந்துள்ள தகவல் சிபிசிஐடி  போலீசார் விசாரணையில் தெரியவந் துள்ளது. கொலை, கொள்ளை சம்பவம் நடந்த மறுநாளே 2 பேரும் கோவையில் இருந்து சத்தியமங்கலம் சென்று, அங்கி ருந்து திம்பம் மலைப்பாதை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு சென்றதாக தெரிய வந்துள்ளதாக தெரிகிறது.  இதையடுத்து அதிகாரிகள் சயான் மற்றும்  கனகராஜ் ஆந்திராவில் சந்தித்தவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். அங்கு அவரிடம், இவர் களின் பழக்கம் உங்களுக்கு யார் மூலம் கிடைத்தது. யார் அனுப்பி வைத்தார்கள். அவர்கள், உங்களை சந்தித்தபோது கொட நாடு கொலை, கொள்ளை தொடர்பாக ஏதாவது தகவல்களை தெரிவித்தனரா? அல்லது ஆவணங்களை ஏதாவது கொடுத்து  சென்றனரா என்றும் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.