இனாம் நிலப் பிரச்சனை, சர்பாசி சட்டத்தை தவறாக பயன்படுத்தி நிலம் பறிப்பு முதல் தெரு நாய்களால் வளர்ப்பு கால்நடைகளை இழப்பது வரை எண்ணற்ற தாக்குதல்களை திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சந் தித்து வருகின்றனர். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், அமராவதி பாசன திட்டம் என்ற இரண்டு பெரிய பாசனத் திட்டங்கள் கொண்ட மாவட்டம் திருப்பூர். அத்து டன் சமீபத்தில் நடைமுறைக்கு கொண் டுவரப்பட்டுள்ள அத்திக்கடவு அவி நாசி திட்டமும் இம் மாவட்ட விவசாயி களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள் ளது. எனினும் அண்மைக் காலமாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பல் வேறு நெருக்கடிகளை சந்தித்து வரு கின்றனர்.
இனாம் நிலப்பிரச்சனை
இனாம் நிலப் பிரச்சனையில் விவ சாயிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். பல தலை முறைகளாக குடும்பத்தினர் சொத்தாக இருந்த விவசாய நிலத்தை திடீரென தற்போது இந்து சமய அறநிலையத் துறை, கோயிலுக்கு சொந்தமான நிலம் என்று அறிவிக்கிறது. அந்த நிலத்தை விற்கவோ வாங்கவோ கூடாது என்றும் நிபந்தனை விதிக்கிறது. பதிவுத்துறை யும் அதற்கு தலையாட்டுகிறது. வரு வாய்த் துறையும் கண்டுகொள்வ தில்லை. தாங்கள் காலங்காலமாக உழுது பயிரிட்டு பாடுபட்ட நிலத்தை வைத்து தடையின்மை சான்றையும் பெற முடிய வில்லை, அத்துடன் அவசரத் தேவைக்கு வங்கிக் கடன் கூட பெற முடி யவில்லை. கையில் நிலமிருந்தும் அதைக் கொண்டு வாழக் கூட முடிய வில்லை. எல்லா கதவுகளை தட்டினா லும் எந்த கதவும் திறக்கவில்லை. ஒவ் வொரு நாளும் செத்து செத்துப் பிழைப் பதை விட ஒரே முடிவாக குடும்பமே செத்துப் போகலாம் என்று தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்படும் நிலைக்கு பல விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.
நில அபகரிப்பு கும்பல்
அதேபோல் விவசாய நிலங்களை விவசாயிகளிடம் பாதுகாப்பாக வைத் திருப்பதற்காக என்று கொண்டுவரப் பட்ட சர்ஃபாசி சட்டத்தை தவறாக பயன்படுத்தி, வங்கிகள், கடன் வசூ லிப்பு ஏஜென்சிகள் என்ற பெயரில் அடி யாட்கள் படை, நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கான வழக்கறி ஞர், ரியல் எஸ்டேட் என்று சொல்லி அடி மாட்டு விலைக்கு விவசாய நிலத்தை விலைக்கு வாங்க துடிக்கும் நில மாஃ பியா கும்பல் ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டு நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நிலத்தை அபகரித் துள்ளனர். விவசாயத்தில் போதிய வருமா னம் ஈட்ட முடியாத நிலையில், இழப் பைச் சந்திக்கும் சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் ஏதோ ஒரு வகையில் வங்கிக் கடன் பெற்று தங்கள் சொந்த நிலத்தில் ஒரு பகுதியில் விசைத்தறி களை அமைத்து வாழ்ந்து கொள்ள லாம் என்று முயற்சி செய்கின்றனர். ஆனால் விசைத்தறியின் நிலையும் அந்தோ பரிதாபம்! இந்த நிலையில் ஒன்றிய ஆட்சியா ளர்களின் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா பொதுமு டக்கம் என அடுத்தடுத்த தாக்குதலால் தொழிலிலும் லாபம் ஈட்ட முடியா மல், வாங்கிய கடனுக்கும் வட்டி கட்ட முடியாமல் பலர் தவித்துக் கொண்டி ருக்கின்றனர். இரை தேடும் ஓநாய் போல, எங்கு விவசாயிகள் நலிவுற்று இருக்கிறார் கள், யாருடைய நிலத்தை அபகரிக் கலாம் என்று மாபியா கும்பல் வலை பின்னலாக வட்டமிட்டுக் கொண்டிருக் கிறது. வங்கிகளும் தாங்கள் கொடுத்த கடனை எப்படியாவது வசூலிக்க வேண்டும் என்பதற்காக, வசூல் ஏஜென்சி என்ற பெயரில் அடி யாட்களை ஏவுகின்றனர். ரியல் எஸ் டேட் கும்பலும், வங்கி மற்றும் கடன் வசூல் ஏஜென்சிகளும் கைகோர்த்துக் கொண்டு சில வழக்கறிஞர்களை கையில் வைத்துக் கொண்டு கடன் கட்ட முடியாததால் நிலத்தை ஜப்தி செய்கி றோம் என்று அறிவித்து திடீரென ஒரு நாள் விவசாயியின் நிலத்தில் வந்து நிற் கின்றனர். செய்வதறியாது கலங்கிப் போய் நிற்கிறது அந்த குடும்பம். இந்த கும்பல் நில அபகரிப்புக்கு காவல்துறை பாதுகாப்பும் கொடுக்கப் படுகிறது. இப்படியாக பலநூறு விவ சாயிகளின் நிலம் அபகரிக்கப்பட்டுள் ளது. இந்த விவகாரத்தில் மட்டும் இந்த மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் அல்லது கொல்லப் பட்டவர்கள் குறைந்தது 100 பேராவது இருக்கும் என்று நொய்யல் விவசா யிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப் பாளர் திருஞான சம்பந்தம் கூறு கிறார்.
நகரமயமாக்க சதியா?
அது கோயில் நிலம் என்று சொல்வ தானாலும் சரி அல்லது கடனை மீட்க முடியாமல் ஜப்தி செய்வதாக சொல்வ தானாலும் சரி விவசாயிகளே குறி வைக்கப்படுகின்றனர். தனித்தனியாக இவ்வாறு அபகரிக்கப்படும் விவசாய விளைநிலங்கள், நகரமயமாக் கலில் வீட்டுமனை பிரிவுகளாக மாற்றப் பட்டு, பச்சை பயிர்கள் முளைத்த விளைநிலங்கள் கான்கிரீட் கட்டடங் கள் நிரம்பிய காடுகளாக மாற்றப்பட் டுள்ளன. கடந்த 33 ஆண்டுகளாக ஆட்சியா ளர்கள் அமலாக்கி வரும் தாராள மயக் கொள்கையின் ஒரு பகுதியாக விவசா யம் கண்டு கொள்ளப்படாமல் புறக்க ணிக்கப்படுகிறது. ஏதோ ஒரு கார ணத்தை சொல்லி வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வேளாண்துறை, மின்சாரத்துறை, கூட் டுறவுத்துறை என பல துறைகளும் விவசாயிகளையும், விவசாயத்தை யும் புறக்கணித்து வருகின்றன. தாரா ளமயக் கொள்கைப்படி நகரமயம் ஆக் குவதற்காக திட்டமிட்டே இப்படி செய் கிறார்களா என்ற சந்தேகம் எழுகி றது. விளைநிலங்கள் அபகரிக்கப்படு வது ஒருபுறம் என்றால், இருக்கும் நிலத் தில் விவசாயம் செய்வோருக்கு ஆயி ரம் பிரச்சனைகள் வருகின்றன. ஆய்வு செய்யாமல் தரம் இல்லாத விதை களை கொடுத்து விவசாயிகளை நஷ் டப்படுத்துகின்றனர் வேளாண் துறையி னர். தனியார் நிறுவனங்கள் அபரிமித விலையில் விதைகளையும், இன்ன பிற இடுபொருட்களையும் விவசா யிகள் தலையில் கட்டுகின்றனர். நீர்ப்பாசனத்திலும் வசதி படைத்த பெரும் விவசாயிகள் தண்ணீர் திருட் டில் ஈடுபடவும், தனியார் நீர் விற்பனை நிறுவனங்கள் விவசாயத்திற்கான தண்ணீரை திருடுவதையும் அரசு நிர் வாகத்தால் தடுக்க முடியவில்லை. அல்லது தடுக்க முனையவில்லை. எனவே சாதாரண சிறு குறு விவசாயி களுக்கு நியாயமான நீர் பங்கீடு என்ப தும் கிடைப்பதில்லை. ஒரு பகுதி விவசாயிகள் பாசன வசதியே இல்லா மல் மானாவாரி சாகுபடியை நம்பி இருந்தாலும் அவர்கள் வாழ்வும் பெரும் திண்டாட்டமாக உள்ளது.
இயங்காத சர்க்கரை ஆலை
இத்தனையையும் கடந்து அவர் கள் விளைவிக்கும் விளை பொருட் களுக்கு கட்டுபடியான நியாயமான விலை கிடைப்பதில்லை. திருப்பூர் மாவட்டத்தின் கரும்பு விவசாயிக ளுக்கு பெரும் நம்பிக்கையாக இருந்த அமராவதி சர்க்கரை ஆலை இந்த ஆண்டு இயங்கவில்லை. அவர்கள் பதிவு செய்த கரும்புகளை சர்க்கரை அரவைக்கு எடுத்துக் கொள்வதிலும், அவர்களுக்கு உரிய கடன் தொகை கூட கொடுப்பதிலும் நிச்சயமற்ற நிலையே உள்ளது. விவசாயம் தான் பொய்த்துப் போகி றது, ஆடு மாடு கோழிகளை வளர்த்தா வது அதில் கிடைக்கும் சிறு வருமா னத்தில் பிழைத்துக் கொள்ளலாம் என்று கால்நடை வளர்ப்பில் ஈடுபட் டால் அதிலும் சிக்கல் வருகிறது. கடந்த நான்கைந்து ஆண்டு காலமாகவே திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் கடித்து, வளர்ப்பு ஆடு களும் கன்று குட்டிகள், கோழிகளும் கொல்லப்படுவது நடைபெற்று வருகிறது. எனினும் சமீப ஓரிரு மாத மாக இந்த நிகழ்வுகள் பெருமளவு அதி கரித்து விட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் கொல்லப்பட்டு விட்டன. ஒரே ஒரு ஏக்கர் நிலம் கூட இல்லாத விவசாயி கால்நடைகளை வளர்த்து சந்தையில் விற்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பி இருந்தவர் ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்து மொத்த கால்நடைக ளையும் இழந்த சோகமும் இந்த மாவட் டத்தில் நடந்துள்ளது.
நியாயம் கேட்க கூடாதா?
இத்தனைக்கும் பிறகும், கால்நடை களை இழந்ததற்கு காவல் நிலை யத்தில் வழக்குப்பதிவு கூட செய்வ தில்லை, இழப்பீடு வழங்குவதற் கும் மாவட்ட நிர்வாகம் அவசர உணர்வோடும் செயல்படவில்லை. ஆனால் இழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கேட்டு ஆட்சியர் அலுவல கத்திற்கு முறையீடு செய்வோம் என்று வந்தால் மொத்த விவசாயிகளையும் நகரத்திற்குள்ளேயே விடாமல் எல்லை யிலேயே தடுத்து நிறுத்திய காவல் துறை நடவடிக்கை ஜனநாயக விரோ தமானது. விடாப்பிடியான போராட்டத்தின் மூலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து இறந்த கால்நடைகளுக்கு இழப் பீடு வழங்குவதற்கு எழுத்துப்பூர் வமான உத்தரவாதம் வேண்டும் என்று வற்புறுத்தி கடிதமும் பெற்றுள்ளனர் விவசாயிகள். நிவாரணம் எப்போது கிடைக்கும் என்பது அரசுக்கே வெளிச் சம். விவசாயிகளின் மீது கருணை கொண்ட அரசாக இருந்தால், தெரு நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்வதைப் பற்றி பேசிக் கொண்டி ருக்காது, தெரு நாய்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தவும் தேவைப்பட்டால் அவற்றை கொல்வதற்கும் நடவ டிக்கை எடுக்கும். ஆட்சியர் தலை மையில் செயல்படும் மிருகவதை தடுப்புச் சங்கம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல வளர்ப்பு கால்நடைகளை இழந்த விவ சாயிகளை, அவர்களாகவே கொன்று விட்டு தெருநாய்கள் மீது பழி போடு கிறார்கள் என்று இழிவு படுத்துகிறார் கள். இத்தகைய அவதூறு செய்யும் மேட்டுக்குடி கும்பலை சட்டப்படி கைது செய்ய வேண்டிய காவல்துறை பாது காப்பு கொடுக்கிறது. விவசாயிகள் வீதி யில் இருக்கின்றனர்.
போராடத் தள்ளும் நெருக்கடி
திருப்பூர் மாவட்டம் என்றால் பின்ன லாடை தொழில் நகரம், அதைச் சார்ந்த பொருளாதாரம் என்பதாக ஒரு தோற் றம் உள்ளது. ஆனால் அது முழு உண்மை இல்லை. திருப்பூர் மாவட் டத்தை பொருத்தவரை சரிபாதி தொழில், மறு பாதி விவசாயம் என்று இரண்டும் சம அளவில் உள்ளன. ஏற்கனவே ஒன்றிய ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த தொடர் தாக்குதலால் பின் னலாடை தொழில் நிலைகுலைந்து நிற் கிறது. திருப்பூர் அதன் அடையா ளத்தை இழந்து வருகிறது. இந்த சூழ்நி லையில் விவசாயத்தை பாதுகாத் தால் இந்த மாவட்டம் மூச்சு விட முடி யும். ஆனால் விவசாயமும் மேலே சொன்னபடி பல்வேறு தாக்குதல்களை சந்தித்து நிலை குலைந்து வருகி றது. விவசாயத்தையும், விவசாயிக ளையும் பாதுகாக்க ஒரு ஒன்றுபட்ட நீடித்த போராட்டத்திற்கு இந்த மாவட் டம் தள்ளப்படும் நிலை தற்போது ஏற் பட்டுள்ளது. -வே.தூயவன்