districts

போதைப்பொருள் விற்பனையை தடுத்ததால் கொலை

ஈரோடு, டிச.16- ஈரோட்டில் போதைப்பொருள் விற்ப னையைத் தடுத்ததால் மகன் கொலை செய்யப்பட்டதாக, அவரின் தாய் கண் ணீருடன் புகாரளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், மரப்பாலம், நேதாஜி சாலை, ஆலமரத்து தெருவைச் சேர்ந்த பூபதி என்பவரின் மனைவி  ராஜாத்தி (42), ஈரோடு மாவட்ட காவல்  அலுவலகத்தில் வெள்ளியன்று மனு  ஒன்றை அளித்தார். அம்மனுவில், ஈரோடு நடராஜா திரையரங்கு பின்புறம் உள்ள  பெரும்பள்ளம் ஓடையில் எனது மூத்த  மகன் மணிகண்டன் தலையில் பலத்த  காயத்துடன் கடந்த டிச.9 ஆம் தேதி யன்று இரவு 8 மணிக்கு மயங்கிக் கிடந் தார். அவரை மீட்ட போலீசார் பெருந் துறை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரி வித்த நிலையில், ஈரோடு நகர காவல் துறையினர் எனது மகன் தற்கொலை  செய்து கொண்டதாக வழக்குப்பதிந் துள்ளனர். கடந்த சில மாதங்களாக காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில் பகுதி யில் கஞ்சா, போதை மாத்திரை, போதை  ஊசி விற்பனை அதிகமாக நடந்ததை மணிகண்டன் கண்டித்தார். போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூ டாது என தடுத்து வந்தார். இதனால் போதைப்பொருட்கள் விற்பனை செய் வோருடன் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில்தான் அவர் இறந்துள் ளார். அவர் தற்கொலை செய்து கொள் ளவில்லை. போதைப்பொருட்கள் விற் பனை செய்யும் கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசா ரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாத்திக்கு ஆதரவாக பல்வேறு கட்சிகளின் நிர்வா கிகளும் மாவட்ட காவல் அலுவலகத் தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.