கோவை, ஆக.10- வயநாடு பேரிடரில் இருந்து மீட்க தமிழ்நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் உதவிகளை செய்து வருகின்றனர் என கேரள உணவுத்துறை அமைச் சர் ஜி.ஆர்.அனில் கோவையில் தெரிவித்தார். கோவை, சூலூரில் உள்ள ஆர்விஎஸ் கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் உணவு மற்றும் பொது விநியோக அமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. இதில், கேரளா மாநில உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, இயற்கை விவசாயம் மற்றும் மர பணு உணவுகளை மீண்டும் பழக் கப்படுத்த வேண்டிய அவசியம். கேரள மாநில அரசு சார்பில் உண வுத்துறை மூலம் செயல்படுத்தப் பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளக்கிப் பேசினார். தொடர்ந்து, ஆர்விஎஸ் கல்வி குழுமம் சார்பில் மாணவர்களிடமிருந்து வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக திரட் டப்பட்ட 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கல்லூரி நிர்வாகத் தினர் அமைச்சரிடம் வழங்கினர். முன்னதாக, கேரளா மாநில உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில எல்லையோ ரம் உள்ள தமிழக கல்லூரிகள் கேரள மாணவ, மாணவிகளுக்கு பெருமளவில் பயன்பட்டு வருகி றது. கல்வியை பொருத்தவரை கேரள மாநிலம் உயர்ந்த இடத்தில் உள்ளது. வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து பிரதமரின் வருகையை கேரள மக்கள் எதிர் பார்த்து காத்திருந்தனர். வயநாடு பகுதிகளில் நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்தவுடன் அரசு இயந்தி ரம் முழுவீச்சில் செயல்பட்டது. மாநில அமைச்சர்கள் 4 பேர் அங் கேயே முகாமிட்டு மீட்புப்பணி களை கவனித்து வந்தார்கள்.உயி ருக்கு போராடிக் கொண்டிருந்தவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து மீட்பு நடவடிக்கைகளை மேற் கொண்டோம். கூடுதல் அதிகாரி களை நியமித்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நடவ டிக்கைகளை போர்க்கால அடிப்ப டையில் மேற்கொண்டு வருகி றோம். ராணுவம், போலீசார், தீய ணைப்புத் துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளின் அமைப்பு களைச் சேர்ந்தவர்களும் மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். பாதிக்கப்பட்ட பகு திகளில் அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தி பொதுமக்களை மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். இதற்காக ஒன்றிய அர சிடம் 2000 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளோம். இந்த அசாதாரண சூழலை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவித்து தேவை யான உதவிகளை செய்ய வேண் டும். இந்தக் கோர சம்பவத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஒன்றிய அரசு இதனை தேசிய பேரிடராக அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழ்நாடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந் தும் கேரள மக்கள் மீது அன்பு கொண்டவர்கள் பலர் தங்களால் இயன்ற நிதியினை கொடுத்து வருகின்றனர், என்றார். வயநாடு நிலச்சரிவை காரணம் காட்டி முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று வலைதளங்களில் கோரிக்கை வலுத்துள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில ளித்த அமைச்சர், தமிழ் மற்றும் மலையாள மக்களிடையே குழப் பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் மலிவான தந்திரங்களை பயன்ப டுத்தி வருகின்றனர். தமிழக - கேரள மக்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார் கள். தமிழர்களை சகோதர கண் ணோட்டத்துடன் தான் கேரளா அணுகுகிறது என்றார்.