கோவை, ஜன.4- கோவை விமான நிலையத் திற்கு துப்பாக்கியுடன் வந்த கேரள காங்கிரஸ் நிர்வாகியை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம், பட்டாம்பி பகுதி யைச் சேர்ந்தவர் கே.எஸ்.பி.ஏ தங் கல். இவர், கேரள காங்கிரஸ் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பின ராக உள்ளார். பட்டாம்பி நகராட்சி யின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இந்நிலை யில் தங்கல், கோவை விமான நிலை யத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல இருந்தார். இதற்காக பட் டாம்பியில் இருந்து தங்கல் காரில் கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத் திற்கு அவர் வந்தபோது, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரது உடைமைகளை சோதனை யிட்டனர். அப்போது அவரது கைப் பையில் ஒரு 22 எம்.எம். கைத்துப் பாக்கி மற்றும் 7 தோட்டாக்கள் இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. கைத் துப்பாக்கி பயன்படுத்தும் நிலையில் இல்லாததும் தெரியவந்தது. இது குறித்து தங்கலிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசா ரணை செய்த போது, சொந்த பாது காப்பிற்காக வைத்திருப்பதாகவும், உடமைகளோடு துப்பாக்கி இருந் தது குறித்து தனக்கு தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். இருப்பினும் துப்பாக்கிக்கு உரிய ஆவணங்கள் தங்கலிடம் இல் லாததால் துப்பாக்கி மற்றும் தோட் டாக்களை மத்திய தொழில் பாது காப்புப் படையினர் பறிமுதல் செய்த னர். பின்னர் அவற்றை பீளமேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்த னர். இதையடுத்து காவல் துறையி னர் பீளமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தங்கலிடம் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.