அவிநாசி, டிச.14 - தமிழ் திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ் திறனாய்வு தேர்வில் கருவலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தமிழ்ச்செல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். மேலும், இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவி நீதிசெல்வி ஆகியோருக்கு அவிநாசி அறிவுச்சுடர் அறக்கட்டளை சார்பில், தமிழ் ஒளிச்சுடர் விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் சத்யபாமா தலைமை வகித்தார். அறக்கட்டளைத் தலைவர் முத்துக்குமரன், செயலர் சொக்கலிங்கம், பொறுப்பாளர்கள் ரவீந்திரன், சுந்தர கிருஷ்ணன், லட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். உதவி தலைமை ஆசிரியர் பிரபாவதி, தமிழாசிரியர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.