திருப்பூர், மே 31 – மாமேதை காரல் மார்க்ஸ் 205ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காங்கேயத்தில் ரத்த தான முகாம் நடத்தப்பட் டது. காங்கேயம் பகத்சிங் கற்றல் மையம் சார்பாக திருநீலகண்டர் வீதி அருணாச்சல உடையார் தோட்டத் தில் இந்த ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்த ரத்த தான முகாமுக்கு ஜனார்த்தனன் தலைமை ஏற்றார். முகாமை அ.மாணிக்கவேலன் தொடக்கி வைத்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங் கத்தினர் உள்பட இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற் றனர். மொத்தம் 39 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்த தானம் வழங்கினர். மோகனகுரு, கவின் ஹரி, நல்லசாமி தினேஷ்ராம், முகேஷ் பாலாஜி, சௌமியன் உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.