உதகை, ஜூலை 15- மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வித் தந்தை காமராஜரின் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி தினமாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரஷீத் தலைமை ஏற்றார். இதில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் மாண வர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் பால் விக்டர், ஆசிரியர்கள் பாபு, குமார், ஜெசிக்கா, சீனிவாஸ், பிரோஸ், கற்பகவல்லி, பார்வதி ஆகியோர் பேசும்போது, மாணவர்கள் காமராஜரை பின்பற்றி எளிமையுடனும், ஆக்கப்பூர்வமாகவும் வாழ்ந்து காட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.