districts

img

செம்மங்குழிப்பாளையத்தில் கல்குவாரி: மக்கள் முற்றுகை போராட்டம்

திருப்பூர், மார்ச் 22 - காங்கேயம், மறவபாளையம்  ஊராட்சிக்குட்பட்ட செம்மங்கு ழிப்பாளையம் பகுதியில் சட்டவிரோ தமாக கல்குவாரி இயங்குவதாக புகார் தெரிவித்து, கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் புதனன்று கல் குவாரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்கு வாரியில் வைத்திருந்த வெடி மருந் துகள் ஜேசிபி இயந்திரம் மற்றும்  டிராக்டர் சிறை பிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம்  வட்டம், மரவபாளையம் ஊராட்சி, செம்மங்குழிப்பாளையம் கிராமம் புல எண்: 407/1,2-ல் ஈரோடு என்.சந்தோஷ் கல்குவாரி, மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் இசைவாணை இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வருகிறது. மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் இசைவாணை இல்லை என் றால் உதவி இயக்குநர் (கனிமம்)  நடைச்சீட்டு கொடுக்க முடியாது. ஆனால், இந்த குவாரி சட்டவிரோத மாக நடைபெற்று வருகிறது. போலி நடைச்சீட்டை வைத்துக் கொண்டு சட்டவிரோதமாக இயங்கி வருகி றது. மேலும் சட்ட விரோதமாக வெடி மருந்துகளை பெற்று கல்குவாரி இயங்கி வருகிறது. இதையடுத்து புதனன்று தமிழ் நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க  ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள் ளிட்ட 50க்கும் மேற்பட்ட செம்மங் குழிப்பாளையம் பெண்கள், ஆண் கள், குழந்தைகள் உட்பட கிராம மக் கள் கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர், காங் கேயம் வட்டாட்சியர், நத்தக்காடை யூர் வருவாய் ஆய்வாளர், மரவபா ளையம் கிராம நிர்வாக அலுவலர்  ஆகியோருக்கு தகவல் கொடுத்து  விட்டு இசைவாணை இல்லாத சந் தோஷ் கல் குவாரி முன்பு முற்றுகை யிட்டு அமர்ந்து போராட்டம் நடத் தினர்.