districts

img

வாலிபர் சங்கம் சார்பில் கபடி போட்டி

சேலம், பிப்.9- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டு கழகம் சார்பில் சேலத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி  நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கபடி போட்டி, ஆத்தூர்  காட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது. இப்போட்டியை  சர்வதேச கபடி விளையாட்டு வீரரும், யூனியன் பாங்க் ஆப்  இந்தியா துணை மேலாளருமான எஸ்.வெங்கடேசன் துவக்கி  வைத்தார். 44 அணிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டியை  காண திரளானோர் குவிந்தனர். இதில், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வி.பெரியசாமி,  மாவட்ட தலைவர் வி.ஜெகநாதன், முன்னாள் நிர்வாகி ஏ. முருகேசன், ஆத்தூர் தாலுகா தலைவர் எஸ்.பிரபு, செய லாளர் கே.பெரியண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.