districts

img

சிபிஎம் மொரப்பூர் ஒன்றியச் செயலாளராக கே.தங்கராசு தேர்வு

தருமபுரி, நவ.3- மார்க்சிஸ்ட் கட்சியின் மொரப்பூர் ஒன்றியச் செயலாள ராக கே.தங்கராசு தேர்வு செய் யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட் டம், மொரப்பூர் ஒன்றிய 3  ஆவது மாநாடு, மொரப்பூர்  ராமாக்கவுண்டர் திருமண மண்டபத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவரங்கத் தில் ஞாயிறன்று நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.வி.மாது, ஏ.இந்திரா காந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மூத்த  தோழர் என்.ஜோதி செங்கொடியை ஏற்றி  வைத்தார். ஆனஸ்ட்ராஜ் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். ஒன்றியக்குழு உறுப்பி னர் என். ராமகிருஷ்ணன் வரவேற்றார். மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் துவக்க வுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் கே. தங்கராசு அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மல்லிகா, தி.வ.தனுசன் ஆகியோர் வாழ்த் திப் பேசினார். இம்மாநாட்டில், கே.ஈச்சம்பாடி அணைநீரை மொரப்பூர் பகுதி ஏரிகளில் நிரப்ப வேண்டும். செனாக்கல்  கால்வாய் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். மொரப்பூரில் மரவள்ளிக்கிழங்கு தொழிற் சாலை ஏற்படுத்த வேண்டும். மொரப்பூர் - தருமபுரி ரயில்வே  திட்டத்தை விரைந்து செயல்ப டுத்த வேண்டும். மருதிப்படி மோட்டூர் கிரா மத்திற்கு மயான வசதி செய்துதர வேண்டும். கம்பைநல்லூரில் சார்பதிவாளர் அலுவல கம் அமைக்க வேண்டும். சாமண்டஅள்ளி ஊராட்சி, பெரியார் நகர் மயானத்திற்கு சுற் றுச்சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கட்சியின் மொரப்பூர் ஒன்றியச் செயலாளராக கே.தங்கராசு மற்றும்  9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார் நிறைவுரையாற்றினார். முடிவில், மாதேஷ் நன்றி கூறினார்.