திருப்பூர், மார்ச் 31 - திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருப் பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் ஞாயிறன்று காலை 7.00 மணிக்கு நஞ்சப்பா மாந கராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டோர் இடையே வாக்கு சேகரித்தார். பின்னர் 8 மணிக்கு பாரப்பாளையம், கட்டபொம்மன் சிலை அருகில் இருந்து புறப்பட்டு பாரப்பாளையம், கவுண்டநாயக்கன்பாளையம், கோல்டன் நகர், சூர்யா காலனி, குத்துஸ்புரம், பவானி நகர், மூர்த்தி நகர், ரங்கநாதபுரம், திருநீல கண்ட புரம், நெசவாளர் காலனி, இளங்கோ நகர், லட்சுமி நகர், முல்லை வீதி, பி.என். ரோடு, திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதி களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக மாவட்டச் செயலாளர் கா.செல்வராஜ் எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் கே.காமராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மறும லர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், திராவி டர் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சி களின் தலைவர்கள் உடன் இருந்தனர்.