districts

மாநில அரசின் திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும்

திருப்பூர், பிப்.11- திமுக அரசு நிறைவேற்றும் நலத் திட்டங்கள் மக்களுக்கு வந்து சேரு வதற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் மதசார்பற்ற முற்போக்கு கூட்ட ணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் கூறினார். திருப்பூர் மாநகராட்சி 28ஆவது வார்டில் மதசார்பற்ற கூட்டணி ஆதர வுடன் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் வீ.பாலசுப்பிர மணியம் தேர்தல் பணிமனை திறப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக பனியன்  தொழிற்சங்க நிர்வாகி கதிரேசன்  தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் எம்.ரவி, இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், கொம தேக நிர்வாகி வேலுமணி உள்ளிட் டோர் உரையாற்றினர். இவ்விழாவில் பங்கேற்ற க.செல்வ ராஜ் பணிமனை அலுவலகத்தைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்; திமுக,  மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எப்பொழுதெல்லாம் கூட்டணியாக  சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்கின்ற னவோ அப்பொழுதெல்லாம் வெற்றி  பெற்றிருக்கிறோம். கடந்த 2006 ஆம்  ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்த லில் திருப்பூர் மாநகராட்சியில் திமு கவுக்கு தனிப்பெரும்பான்மை இல் லாதபோதும், இந்த கூட்டணி கட்சி களின் ஆதரவுடன் ஐந்தாண்டு காலம்  சிறப்பான நிர்வாகம் நடைபெற்றது.  சமூக நோக்கோடு வார்டுகளுக்கு தேவையான பணிகள் செய்யப்பட் டன. திமுக நிர்வாகத்தில் பாரபட்சம் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் நிதி ஒதுக்கி பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அதிமுகவை பொறுத்த வரை அது கட்சியல்ல இபிஎஸ், ஓபிஎஸ் கம்பெனியாக செயல்படுகி றது. அதன் மேனேஜராக இங்கு மேயர் வேட்பாளர் குணசேகரன் போட்டியிடு கிறார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், உள்ளாட்சி நிர்வாகத்தில் மிகப்பெரும் ஊழல் நடைபெற்றது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக் கிய நிதியில் ஊழல் நடைபெற்றுள் ளது. இந்த ஊழல்களில் ஆதாரங் களை மாநில அரசு திரட்டி வருகிறது. யாராக இருந்தாலும் அவர்கள் அதற் குரிய தண்டனையை அனுபவிப்பார் கள்.  

தற்போது உள்ளாட்சிகளுக்கு மாநில அரசு ஏராளமாக நிதி ஒதுக்கும். அந்த நிதி ஊழல் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிட, மக்க ளுக்கு வந்து சேருவதற்கு திமுக தலை மையிலான மதசார்பற்ற முற்போக் குக் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒவ் வொரு வார்டிலும் கூட்டணி கட்சி களைச் சேர்ந்த வேட்பாளர்கள் யார் நிறுத்தப்பட்டிருந்தாலும் அங்கு முதல்வர் ஸ்டாலினே போட்டியிடு வதாக நினைத்து அனைவரும் பணி யாற்றி வெற்றி  பெறச் செய்ய வேண் டும். இவ்வாறு க.செல்வராஜ் கூறி னார். இக்கூட்டத்தில் 28ஆவது வார்டு வேட்பாளர் வீ.பாலசுப்பிரமணியத்து டன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன், திமுக பகுதி கழகச் செயலாளர் ஐயப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பி னர்கள் சபுரோ எம்.ரங்கசாமி, ஜி. சாவித்திரி, எம்.கோவிந்தசாமி உள்பட அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர் வாகிகள், ஊழியர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.