districts

img

சிபிஎம் எடப்பாடி தாலுகாச் செயலாளராக கே.நடராஜ் தேர்வு

சேலம், நவ.3- மார்க்சிஸ்ட் கட்சியின் எடப் பாடி தாலுகாச் செயலாளராக கே.நடராஜ் தேர்வு செய்யப்பட் டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா 11 ஆவது மாநாடு, இருப்பாளி பகுதியில் தோழர் டி.மூர்த்தி நினைவரங்கத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. கிளைச் செயலாளர் ஏ. மாணிக்கம் செங்கொடியை ஏற்றி வைத்தார். தாலுகாக்குழு உறுப்பினர் எ.மோகன்ராஜ் வரவேற்றார். தாலுகாக்குழு உறுப்பினர் ஜே.கிருபாகரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். தாலுகாச் செயலாளர் மு.பெரி யண்ணன் அறிக்கையை முன்வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. சேகர், ஜி.கணபதி, வி. இளங்கோ ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இம்மாநாட்டில், பூலாம்பட்டி ஏரியை சுற்று லாத் தலமாக அறிவித்து மேம் படுத்த வேண்டும். எடப்பாடி நக ராட்சியில் பழுதடைந்த மின் விளக்குகள் சரி செய்து, அடிப் படை வசதிகளை மேம்படுத்த  வேண்டும். கைத்தறி, விசைத் தறித் தொழிலுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி  வரியை ரத்து செய்ய வேண்டும். நுண் நிதி நிறுவனங்களின் அடாவடி போக்கை  தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் எடப்பாடி தாலுகாச் செயலாளராக கே.நடராஜ் மற்றும்  7 தாலுகாக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். முடிவில், தாலுகாக்குழு உறுப்பினர் கே.நடராஜ் நன்றி கூறினார்.