திருப்பூர், ஏப்.21- தமிழ்நாட்டில் முதன் முதலில் மே தினம் கொண்டாடி நூற்றாண்டு ஆகக்கூடிய நிலையில், தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றி இருப்பதை கைவிட வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.கனகராஜ் வலியுறுத்தி னார். திருப்பூர் தியாகி பழனிசாமி நகரில் வியா ழனன்று ஆசர் மில் தியாகி பழனிசாமியின் 73 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக் கப்பட்டது. இந்த நினைவேந்தல் பொதுக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசியது வருமாறு: இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் சென்னை கடற் கரையில் 1923 ஆம் ஆண்டு பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த முன்னோடி சிங்கார வேலர் மே தின கொடியேற்றி விழாவை நடத் தினார். அதன் நூற்றாண்டு மே தின விழா தற் போது கொண்டாடப்பட உள்ளது. மே தினத்திற்கு விடுமுறை அறிவித்தது திமுகவின் கலைஞர் அரசுதான். வில்லிவாக் கம் எம்எல்ஏவாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப் பினர் உ.ரா. வரதராசன் சட்டமன்றத்தில் முன் வைத்த கோரிக்கையை ஏற்று சென்னை நேப்பியர் பூங்காவை, மே தின பூங்கா என பெயர் மாற்றியதும் கலைஞர் தலைமையி லான திமுக அரசுதான். தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரம் என சட்டப் படி நிர்ணயித்தது இந்த மே தின போராட்டம் தான். ஒருபுறம் மே தின விழாவை கொண்டா டிக் கொண்டு அதன் அடிப்படை நோக்கத்தை சிதைப்பது சரியல்ல. பாஜக அல்லாத மாநி லங்களில் அதிக முதலீடு பெரும் மாநிலமான தமிழகத்தில், தொழிலாளர் விரோத 65 ஏ திருத்த சட்டத்தை முதலாவதாக நிறைவேற்றி இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனவே, திமுக அரசு இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மகத்தான தியாக பாரம்பரியத்தைக் கொண்டது கம்யூனிஸ்ட் இயக்கம். இன்று பெறக்கூடிய உரிமைகள் ஒவ்வொன்றின் பின் னாலும் மாபெரும் சுதந்திரப் போராட்ட தியா கம் அடங்கியிருக்கிறது.
குறிப்பாக, கம்யூ னிஸ்டுகள் மிகப் பெரும் தியாகம் செய்துள்ள னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மூன்று பொதுச் செயலாளராக இருந்த பி. சுந்தரையா, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், ஹரி கிஷன் சிங் சுர்ஜித், நூறு வயது கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்.நல்ல கண்ணு என எண்ணற்ற தலைவர்கள் தோழர் கள் கடும் சிறைவாசத்தையும், சித்திரவதை களையும் சந்தித்து போராடியுள்ளனர். ஆசர் மில் தியாகி பழனிச்சாமி போல் ஏராளமான தோழர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். பாஜகவின் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபா போன்ற அமைப்புகளில் இப்படி ஒரே ஒரு வரை கூட சொல்ல முடியாது. எனவே இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியோ இந்திய விடுதலையின் மகத்துவம் பற்றியோ ஆர்எஸ்எஸ் பாஜகவுக்கு எதுவும் தெரி யாது. இன்று நாட்டை காக்க வேண்டிய மகத் தான கடமை நம் முன்னால் உள்ளது. அதற் காக கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் சேர்ந்து நின்று போராடும். மனித குலத்திற்கே எதிரான அமைப்புகளான சங் பரிவாரத்துக்கு எதிராக போராடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, திமுகவுடன் இருக்கும். அதேசம யம் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரி மைகள் கைவிடுவதற்கு மாநில அரசு முடி வுரை எழுதக்கூடாது. இதில் நியாயம் இல்லை. எனவே, தொழிலாளர் விரோத சட்டத்தை முதல் வர், தொழிலாளர் துறை அமைச்சர் கைவிட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் பெருந்திர ளானோர் பங்கேற்றனர்.