districts

img

கு.இராமகிருட்டிணன் துணைவியார் காலமானார்

கோவை, ஜன.20-  தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணனின் இணையர் தோழர் வசந்தி (59)  வெள் ளியன்று காலமானார்.  மிசா, தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களில்  கைதாகி கு.ராமகிருட்டிணன் சுமார் ஐந்தாண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். இக்காலத்தில், இவரின் மன  உறுதி குலையாமல் இருக்க ஆறுதலாகவும், மகள், மகன் இரு  பிள்ளைகளை வளர்த்தெடுத்து ஆளாக்குவதில் முனைப் போடு செயல்பட்ட தோழர் வசந்தி. உடல்நலக்குறைவால் வெள்ளியன்று காலமானார். இவரது இறுதி நிகழ்வு சனியன்று (இன்று) காலை 10 மணிக்கு பாப்பநாய்க்கன் பாளையத்தில் உள்ள ஜி.கே.டி மின் மயானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக, தோழர் வசந்தி அவர்களின் மறைவு செய்திய றிந்து பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, கு.ராமகிருட்டிணனுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.