மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும், இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஆக.3) சென்னையில் பேரணி நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை இந்திய கம்யூனிஸ்ட்கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் இரா.திருமலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.