நாமக்கல், டிச. 6- சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரின் 66 ஆம் ஆண்டு நினைவு தினம் நாடு முழு வதும் எழுச்சியோடு செவ்வாயன்று அனு சரிக்கப்பட்டது. சக மனிதனை சாதியின் பெய ரால் ஒடுக்குமுறைக்குள்ளாக்குவதை எதிர்த்த போராட்டத்தை வீரியத்தோடு முன்னெடுப் போம் என்று சூளுரைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கட் சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். ராசிபுரத்தில் உள்ள அவரது திருவுரு வைச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.செல்வராசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலை வர் பி.செல்வராஜ், மாதர் சங்க மாவட்ட தலை வர் பி.ராணி, நகர செயலாளர் சி.சண்முகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தருமபுரி
தருமபுரியில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் டாக்டர் அம் பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தரும புரி செங்கொடிபுரத்தில் அவரது உருவப்படத் துக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப் பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. ஜெயராமன் தலைமை தாங்கினார். இதில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கத்தின் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்த லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் கே.கோவிந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் பொ.மு.நந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈரோடு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் அம்பேத்க ருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைக்கப்பட் டுள்ள அம்பேத்கரின் உருவச்சிலைக்கு தாலுகா செயலாளர் சொங்கப்பன் தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிபிஎம் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் மற்றும் சிபிஎம், சிஐடியு உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த திர ளானோர் பங்கேற்றனர். இதேபோன்று பவானி, பெருந்துறை உள் ளிட்ட இடங்களில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.
கோவை
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு தீண்டாமை முன்னணி சார்பில் வடகோவை எப்சி குடோன் வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செய்யப்பட்டது. இதில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞா னம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா. ஆறுச்சாமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் என்.ஜாகீர், கிழக்கு நகர செயலாளர் என். செல்வராஜ், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரத்தினகுமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசாருதீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் மாவட்ட பொருளாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோல் கோவை ஒருங்கிணைந்த நீதி மன்றம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் கள் சங்கம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ஜோதிக்குமார் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் ராமர், மாவட்டக்குழு உறுப்பினர் கள் மற்றும் பெருந்திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்டம், ஓமலூரில் டாக்டர் அம் பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண் முகராஜா, ஓமலூர் தாலுகா செயலாளர் ஈஸ் வரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சேலம் மாநகரத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஆர். குழந்தைவேல் தலைமையில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குண சேகரன், மேற்கு மாநகர செயலாளர் எம். கனக ராஜ் வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன் குமார் உள்ளிட்ட தலைவர்கள் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். சேலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சர்க்கிளை திறந்து வைத்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்ன தாக சேலம் அரசு கலைக் கல்லூரி முன்பு புதி தாக புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் சர்க்கிளில் உள்ள திருவுருவச் சிலையை மாவட்ட வரு வாய் அலுவலர் மருத்துவர் மேனகா திறந்து வைத்து மாலை அணிவித்தார்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் நீதிமன்ற வளா கத்தில் அம்பேத்கர் உருவப்படம் வைக்கப் பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட் டது. நீலகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். இதில், மூத்த வழக்கறிஞர் நஞ்சுண்டன், அரசு வழக்கறிஞர்கள் ஆனந்தன், முகமது உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதே போன்று உதகை மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.