உதகை, செப்.7- கூடலூர் அரசு மருத்துவமனை யில் முதன்முறையாக பெண் நோயாளிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்து வர்கள் சாதனை படைத்தனர். தமிழக - கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் தாலுகா அமைந் துள்ளது. இப்பகுதியில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ வசதி பெறுவ தற்காக மேல் கூடலூரில் தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக போதிய மருத்துவர்கள் பணியிடங் கள் நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இதனால் அவசர காலங் களில் நோயாளிகள், கர்ப்பிணிகள் கேரளா அல்லது உதகைக்கு செல்ல வேண்டும். இருப்பினும் பணியில் உள்ள சில மருத்துவர் களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கூடலூர் தாலு காவுக்குட்பட்ட ஓவேலி பேரூராட்சி, சீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜோ குட்டி (60). இவர் அதேபகுதியில் எஸ்டேட் வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், நீண்ட காலமாக இடது மூட்டு கால் வலி யால் நடக்க முடியாமல் அவதிய டைந்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது கால்களை மருத்துவர்கள் பரிசோ தித்தனர். அப்போது பிஜோ குட்டி யின் கால் மூட்டு எலும்பில் தேய் மானம் இருப்பதை உறுதி செய் தனர். இதன்பின் மருத்துவர்கள் கவின், பராசரன் ஆகியோர் பிஜோ குட்டியின் இடது காலில் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர். இதுகுறித்து கூடலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்து வர் சுரேஷ் கூறுகையில், கூடலூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு இடது காலில் நடக்க முடியாத வகையில் வலி இருந்து வந்தது. இதனால் மருத்துவ மனையில் முதன்முறையாக பெண் நோயாளிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை படைக்கப்பட் டுள்ளது, என்றார்.