districts

img

காப்பீடு சேவை மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிடுக

உதகை, நவ.14- காப்பீடு சேவை மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வலியுறுத்தி அகில இந்திய முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. பாலிசிதாரர்களின் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கட னுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண் டும். காப்பீடு சேவை மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். வெளிநாடு பாலிசிதாரர் களுக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண் டும். அனைத்து வித விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை சான்று தர வேண்டும். 5 வருடங்க ளுக்கு மேற்பட்ட காலாவதியான பாலிசி களையும் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். சிட்டிசன் சார்ட்படி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து சேவைகளும் வழங்கப்பட வேண் டும். பாலிசிதாரர்களின் கருத்துக்களை ஏற்று  கொள்ள வேண்டும். பலமுறை கேஒய்சிக் காக ஆவணங்கள் கேட்பதை தவிர்க்க வேண் டும். ஒரே இடத்தில் பாலிசி அச்சடிப்பது மற் றும் அனுப்புவதை நிறுத்த வேண்டும். பழைய முறையையே பின்பற்ற வேண்டும். முகவர் களுக்கு பணிக்கொடையை ரூ.20 லட்சமாக  உயர்த்த வேண்டும். கமிசனை உயர்த்தி  வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு  அனைத்து முகவர்களுக்கும் வழங்க வேண் டும். நேரடி முகவர்களுக்காக கூடுதல் பணப் பயன்களை வழங்க வேண்டும். முகவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடன் தர வேண்டும். முகவர் நல நிதி அமைக்க வேண்டும். முக வர்களை தொழில்முறை முகவர்களாக அங் கீகரிக்க வேண்டும். முகவர்களுக்கு பங்க ளிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு வின் கோவை கோட்டம் சார்பில் உதகை  ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கோவை கோட்ட பொருளாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். இதில் உதகை தலைவர் சண்முகன், கோத்தகிரி தலைவர் மூர்த்தி, நடராஜ், ராஜ கோபால், ராஜ்குமார், ஜெகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொ டர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை, ஆட்சியர் ச.பா.அம்ரித்திடம் வழங்கினர்.