திருப்பூர், மார்ச் 8- திருப்பூரில் நகைக்கடை கொள்ளை சம் பவத்தில் ஈடுபட்ட பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், திருப் பூர் மாநகரில் உள்ள அனைத்து பின்ன லாடை நிறுவனங்களிலும் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறித்த முழு விவ ரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் ஏ ஜி பாபு தெரிவித்துள் ளார். திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடையில் கடந்த 3ஆம் தேதி இரவு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஏ ஜி பாபு தலைமையில் சம்பவ இடத்திற் குச் சென்ற காவல்துறையினர் தங்கள் விசார ணையை துரிதப்படுத்தினர். இதில் மூன்று கிலோ தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பதாக ஜெயக் குமார் அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 5 தனிப் படை அமைத்து தீவிர விசாரணை மேற் கொண்டு வந்தனர். அப்போது கடையில் இருந்த சிசிடிவி காட்சி மற்றும் திருப்பூர் ரயில் நிலையத்தில் கிடைத்த காட்சிகள் மூலம் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும், பீகார் தப்பிச்செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து ரயில்வே போலி சார் உதவியுடன் கொள்ளை கும்பல் ரயிலில் சென்ற போது நாக்பூர் அருகே வைத்து கைது செய்யப்பட்டது, இதனையடுத்து திங்களன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மக்தப் ஆலம், பத்ருல், முகம்மது சுபான், தில கஸ் ஆகிய 4 பேரை திருப்பூர் அழைத்து வந்து அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற 3.25 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 15 லட்ச ரூபாய் மாநகர காவல் துறையினரால் காட்சிப்படுத்தப்பட் டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு கூறு கையில், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க திருப்பூர் மாநகரில் அனைத்து பகுதி களிலும் உள்ள பின்னலாடை நிறுவனங் களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர் கள் குறித்த முழு விவரங்கள் கேட்கப்பட்டுள் ளது. முழு விவரங்களும் பெறப்பட்ட பின் அவர்கள் மீது ஏற்கனவே ஏதேனும் குற்ற வழக்கு இருக்கிறதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொள்வார் என தெரிவித்தார். மேலும் திருப்பூர் மாநக ரின் பாதுகாப்பு கருதி 12 கோடி மதிப்பீட் டில் 442 இடங்களில் 1200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டிருப்பதா கவும் தெரிவித்தார்.