districts

வங்கியில் அடகு நகைகளை திருடிய நகை மதிப்பீட்டாளர் கைது

திருப்பூர், மார்ச் 17- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாரத ஸ்டேட் வங்கியில் அடகு வைத்த நகைகளில் சிறு சிறு பகுதிகளை திருடிய நகை  மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட் டார். இந்நிலையில் திருடப்பட்ட நகைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி 100க்கும் மேற் பட்ட விவசாயிகள் வங்கியின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்ல டத்தை அடுத்த கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை செயல் பட்டு வருகிறது. இங்கு மேலாள ராக சுதா என்பவரும், நகை மதிப் பீட்டாளராக சேகர் என்பவரும் பணி புரிந்து வருகின்றனர். இந்த  வங்கியில் கேத்தனூர், மந்திரி பாளையம், ஜல்லிப்பட்டி உள் ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகளை தொடங்கி வாடிக் கையாளராக உள்ளனர். விவசா யிகள் அவசர தேவைக்காக தங் கள் நகைகளை இங்கு அடமா னம் வைப்பது வழக்கம். அவ்வாறு நகைகளை அடமானம் வைக்கும் பொழுது நகை மதிப்பீட்டாளர் சேகர் சிட்டா மற்றும் ஆதார் கார் டின் நகல் வழங்கினால் குறைந்த வட்டியில் நகை கடன் கிடைக்கும் என கூறி அதை எடுத்து வரச் சொல்லி விடுவார். அதை நம்பி விவசாயிகள் அவரிடம் நகையை கொடுத்து விட்டு சென்று விடு வார்கள். அந்த சமயத்தில் நகை யில் சிறு கண்ணியை துண்டித்து எடுத்து விடுவதாகத் தெரிகிறது.தொடர்ச்சியாக இதுபோல் நடை பெற்று வந்த சூழ்நிலையில் அடகு நகையை மீட்ட சிலர் ஏற்கெனவே அவர்கள் கொடுத்தபோது இருந்த நகையின் அளவுகள் தற்போது குறைந்து உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகையின் எடையை பரிசோதனை செய்தத தில் வாங்கும் போது இருந்த நகை யின் எடையும், அடகு வைத்து மீட்கப்பட்ட பின் இருந்த நகை யின் எடையிலும் வித்தியாசம் இருந் துள்ளது. இந்நிலையில், தங்கள்  நகையில் ஒருபகுதி திருடப்பட்டி ருப்பதை அறிந்து அதிர்ச்சிய டைந்த விவசாயிகள் சில நாட்க ளுக்கு முன்பு வங்கியை முற்றுகை யிட்டு வங்கி மேலாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்த நகை மதிப்பீட்டாளர் சேகரிடம் பொது மக்கள் விசாரித்த போது தவறை  ஒப்பு கொண்டுள்ளார்.  

இந்த தகவல் வேகமாகப் பரவி யதை அடுத்து நகை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் தொடர்ந்து புகார் அளித்தனர். இந்நிலையில் வங்கி நிர்வாகத்தின் சார்பில் இப்பிரச்சனையில் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வாடிக்கையாளர் கள் வங்கி அலுவலர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், நகை  மதிப்பீட்டாளர் சேகரை கைது  செய்து இழப்பீடு வழங்க வேண் டும் என புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் சேகரை வியா ழனன்று காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் முற்றுகை இந்நிலையில் வங்கியில் நகையை அடமானம் வைத்த விவ சாயிகள் திருடப்பட்ட நகைக ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வருவாய் துறையினர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வங் கியின் முன்பு காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் நந்த கோபாலன் மற்றும் சூலூர் அதி முக சட்ட மன்ற உறுப்பினர் கந்த சாமி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்தனர்.