districts

img

ஜல்லி மற்றும் எம் சாண்ட் விலையேற்றம் ஒப்பந்ததாரர்கள் வேலை நிறுத்தம்

சேலம், பிப். 29- கிரசர் ஜல்லி மற்றும் எம் சாண்ட் மணல் விலை ஏற்றத்தை  கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்த தாரர்கள் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டங்க ளில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கிரசர் ஜல்லி மற்றும்  எம் சாண்ட் மணல் விற்பனை கடுமையாக உயர்ந்துள்ளது.  ஒரு யூனிட் மணல் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.  இதனால், எந்த ஒரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் ஒப்பந்ததாரர்கள் கூட்ட மைப்பினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின் றனர்.  இதன்ஒருபகுதியாக, சேலம் கோட்டை மைதானத்தில் இக்கூட்டமைப்பின் மாநில தலைவர்  திருசங்கு தலைமை யில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில்,  மாநிலம் முழுவதும் இருந்து ஒப்பந்ததாரர்கள் பங்கேற்ற னர்.