districts

img

ஆட்சியர் தலையிடக்கோரி சிஐடியு ஆவேசம்

திருப்பூர், ஜன.3- உடுமலைபேட்டை ஜெயின் இரிகே ஷன் கார்ப்பரேட் நிறுவனத்தில் பழிவாங் கும் நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டுள்ள 29 தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர்,  தொழிலாளர் முறையினர் தலையிட்டு தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க வலி யுறுத்தி திருப்பூரில் சிஐடியு சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஜெயின் இரிகேஷன் நிறுவனத்தில் சிஐ டியு தொழிற்சங்கம் வைத்த காரணத்திற் காக 29 தொழிலாளர்களை தமிழகத்தின் பல் வேறு ஊர்களுக்கு வெவ்வேறு பணிக ளுக்கு மாற்றி நிர்வாகம் தன்னிச்சையாக உத்தரவிட்டுள்ளது. பழிவாங்கும் நோக்கத் தில் சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொள் ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்த தொழிலாளர்கள் கடந்த 27ஆம் தேதி  முதல் கடந்த எட்டு நாட்களாக உள்ளிருப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் நிர்வாகம் இப்பிரச்சனையில் தீர்வு காண முன்வரவில்லை. எனவே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் துறையினர் தலையிட்டு இப்பிரச்சனையில் தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார் பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன் பாக திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலா ளர் கே.ரங்கராஜ் ஆகியோர் உரையாற்றி னர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.